கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

கடந்த 15-ஆம் தேதி காப்பகத்தில் இருந்த ரவிக்குமார் காணாமல் போனதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காப்பக பாதுகாப்பாளர் ரித்தீஷ், நிர்வாகிகளில் ஒருவரான கிரி ராஜ், காப்பக ஊழியர் ரங்கநாயகி, சாஜுவின் தந்தை செந்தில் பாபு கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

கடந்த 12-ஆம் தேதி அவர்கள் வருண்காந்த்தை கட்டையால் தாக்கி சித்தரவதை செய்துள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் கொலையை மறைப்பதற்காக டாக்டர் கவிதாவின் தோட்டத்தில் குழி தோண்டி உடலை புதைத்தது தெரியவந்தது. துர்நாற்றம் வீசாமல் இருக்க வரும் உடலை பாலித்தீன் பையால் சுற்றி மாட்டு சாணம் போட்டு வைத்திருந்தனர்.

அதிகாரிகள் முன்னிலையில் வருண் குமாரின் உடல் தொண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.