கத்தார் நாட்டில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதில் நிரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த சாதனையைப் படைத்த 3-வது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25 வது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனை படைத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் நிரஜ் சோப்ரா. டைமண்ட் லீக் 2025 தொடரில் நிரஜ் சோப்ரா 90 மீட்டர் தூரம் ஈட்டி எரித்ததற்கு வாழ்த்துக்கள். அவரது அயராத அர்ப்பணிப்பு ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இது என அதில் பதிவிட்டுள்ளார்.