கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தின் மறைவான பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை பேருந்து நிலையம் பகுதிக்கு அழைத்து வந்து கை கால்களை கட்டி கொலை செய்தார்களா? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.