சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டை முபஷ்ஷிர் அலி பராமரித்து சுத்தப்படுத்தி வந்தார். இந்நிலையில் முபஷ்ஷிர் அலி கடந்த 30ஆம் தேதி தற்செயலாக மாடிக்கு சென்றபோது அங்கே ஏர் கண்டிஷனரில் இருந்த காப்பர் கம்பிகள் காணாமல் போனது தெரிய வந்தது.

அப்போதுதான் அந்த கம்பியை யாரோ திருடி சென்றது அவருக்கு தெரிய வந்தது. உடனடியாக முபஷ்ஷிர் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன்(19) என்பவர் தான் அந்த காப்பர் கம்பிகளை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .