கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் உழியக் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ஜார்ஜ் கோமஸ். இவருக்கு ஒரு மகளும், பெபின் ஜார்ஜ் (22) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜார்ஜ் கோமஸ்ஸின் மகள் கொல்லம் பகுதியில் உள்ள நீண்டகரை பகுதியில் வசித்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜுவின் மகன் தேஜஸ் ராஜ் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இரு வீட்டருக்கும் தெரிய வந்து இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் அக்காவின் காதலுக்கு தம்பியான  பெபின் ஜார்ஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில் ஜார்ஜ் கோமஸின் மகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதன் பின்னர் தேஜஸ் ராஜூனான காதலை துண்டித்து அவருடன் தொடர்புமில்லாமல் விலகிச் சென்றுள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த தேஜஸ் ராஜ் பலமுறை அப்பெண்ணை தொடர்பு கொண்ட போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த தேஜஸ் ராஜ் காதலியின் வீட்டிற்குச் சென்று தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு காதலின் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அதற்கு காதலியின் பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.

இதனை அடுத்து மார்ச் 18 ஆம் தேதி தேஜஸ் ராஜ் இரவு 7 மணி அளவில் ஒரு காரில் தனது காதலின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். அப்போது வீட்டினுள் இருந்த காதலின் தம்பி பெபின் ஜார்ஜ் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். உடனே தேஜஸ் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெபின் ஜார்ஜை சரமாரியாக குத்தியுள்ளார். பெபின்ஜார்ஜ் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை ஜார்ஜ் கோமஸ், தேஜஸ்ராஜை தடுக்க முயன்றார். இருப்பினும் தேஜஸ் ராஜ், ஜார்ஜ் கோமஸையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளார்.

இதனை அடுத்து தேஜஸ் ராஜ் செம்மான்முக்கு பகுதிக்குச் சென்று தனது கையை அறுத்து தற்கொலை செய்யும் நோக்கில் அந்த பகுதியாக வந்த ரயில் முன் பாய்ந்து உயிர் இழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த தேஜஸ் ராஜின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே நேரத்தில் கத்தி குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த ஜார்ஜ் கோமஸ் மற்றும் பெபின்  ஜார்ஜ் ஆகியோரை கொல்லம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் பெபின் ஜார்ஜ்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்ஜ்  கோமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் காதலியின் திருமணத்திற்கு அவரது தம்பி எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி இல்லாத பட்சத்தில் அவரது தம்பியை குற்றவாளி கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.