கொரக்பூர்-லோகமான்ய திலக் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20104) ரயிலில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது போன்று ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பயணி, அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதோடு, ஏசி பெட்டியில் ஒருவர் பான் மசாலா விற்பனை செய்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ரயில் உணவக மேலாளர் வந்து வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று பயணியை நிறுத்த முயன்றார், இதனால் உணவுப் பணியின் மோசமான மேலாண்மையை குற்றம் சாட்டிய பயணி அவரிடம் பல கேள்விகளை கேட்டுள்ளார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது, மேலும் ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.