பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக விளம்பர போட்டி நடைபெறுகிறது. விளம்பரங்கள் மூலமாக இரண்டு நிறுவனங்களும் முந்தைய காலத்தில் மோதிக்கொண்டன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடந்து வருவதையை ஓட்டி மீண்டும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே விளம்பரப் போர் தொடங்கியுள்ளது. அதாவது சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு கோகோ கோலா நிறுவனம் “இடைவேளைகளில் கோகோ கோலா அருந்துங்கள்” என்று விளம்பரம் செய்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பெப்சி நிறுவனம் புது விளம்பர யுக்தியை  முன்னெடுத்துள்ளது. அதாவது இடைவேளை வரை எதற்கு காத்திருக்கிறீர்கள்? எந்த நேரமும் பெப்சி குடிக்கும் நேரம் தான்” என்று இந்த விளம்பரத்தை ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.