
குஜராத் அம்ரேலியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் விஷால் சவாலியா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விஷால் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த மாதம் ஏழாம் தேதி விஷால் சிறுவனை தனியாக ஒரு அறைக்கு சார்ஜர் கொடுப்பதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஷாலை கைது செய்தனர். அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது ஓரினச்சேர்க்கை வீடியோக்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.