
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சித்த லிங்கேஸ்வரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற பெண்ணுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி ஒரு ஆயுத ஆடை தொழிற்சாலை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சித்த லிங்கேஸ்வராவுக்கு தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம். இதனால் அவர் அடிக்கடி மஞ்சுளாவுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் சம்பவ நாளில் இரவு நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் தன் மனைவியின் வாயை பசை போட்டு ஒட்டியுள்ளார்.
அதாவது தன் மனைவியை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக பெவி குவிக் எடுத்து வாயில் ஒட்டியுள்ளார். ஆனால் அதற்கு முன்பு மஞ்சுளா சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் அங்கிருந்து சித்த லிங்கேஸ்வரா தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மஞ்சுளா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்தலிங்கேஸ்வராவை கைது செய்துள்ளனர்.