ஈசிஆர் சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி.

ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில்  வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதனையடுத்து இந்த சம்பவத்தில் கைதான நபர் அதிமுகவை சேர்ந்தவர் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகின்ற நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவில்,  ஈசிஆர் சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு என்பவன் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் வீடியோ வெளியாகி வைரல் ஆகிறது. காரில் திமுக கட்சி கொடி இருந்தாதால் திமுக மீது வீண் பள்ளி சுமத்தி சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களுடைய முகமூடிகள் கிழிந்து தொங்குகிறது. திமுக ஆட்சியின் மீது பழிபோட முயற்சிப்பதும் சில நாட்களில் உண்மை தெரிய வந்ததும் அதன் முயற்சி தோல்வி அடைவதும் வாடிக்கையாகிவிட்டது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள்? சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.