அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இளவரசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இளவரசனுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.