
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஆதரவாக நேற்று 2-வது நாளாக காளை சிலை, மரப்பாலம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ் தேசிய மக்கள் தாங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். தமிழக மக்கள் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. நீலகிரி, மீத்தேன், ஈத்தேன், அணு உலை, மின்சாரம் போன்ற அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஆனால் காவேரி நீர் உரிமையில் ஒரு சொட்டு கூட பெற முடியவில்லை.
இதற்காக கர்நாடகாவில் மக்கள் போராடும்போது தாக்கப்பட்டனர். ஆனால் அதைக் கூட தடுக்க ஆள் இல்லை. மருத்துவத்தை கனவாக கொண்டுள்ள தம்பி, தங்கை கனவுகளை நினைவாக்காமல் போனதற்கு நீட் கொண்டு வந்தது. காங்கிரஸ் அதற்கு திமுகவுடன் இருந்தது. நீட் ரகசிய திட்டம் உள்ளது என்று கூறி ஆட்சிக்கு திமுக வந்தார்கள். இப்படி எல்லாம் வெற்றி அறிக்கையை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யவில்லை. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கல்வியை மாநில பட்டியல் கொண்டு வருவோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மது கடையை மூடுவோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் வாயை மூடி விட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கும் போது, ஒரே காடு, ஒரே ரேஷன், ஒரே வழி ஏன் எதிர்க்கவில்லை. இந்த இடத்தில் இவர்கள் மாநில உரிமைகளை பாதுகாக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வீதி வீதியாக சென்று வாக்கு கேட்கிறோம், ஆனால் திமுக அதை செய்யவில்லை. இவர்கள் சாதித்ததாக எதை சொல்வார்கள், ரூ.1000 வழங்கும் திட்டம் தவிர என்ன இருக்கிறது. அதையும் மதுக்கடைகள் மூலம் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். பேரிடர் போது உரிய இழப்பீடு கூட பெற முடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் வாக்குறுதி மட்டுமே உள்ளது. இன்று வரை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை, மீனவர்களின் வலை கிழிப்பு, தாக்குதல் படகுகள் பறிமுதல் போன்றவை நடக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் அவ்வாறு நடக்கவில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிற்கின்றது. ஒவ்வொரு மாற்றத்தையும் விரும்பினால் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். இந்த அரசியல் தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வாக்கு கேட்டு வரவில்லை, வருங்கால வாழ்க்கை கேட்டு வருகின்றோம். நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி இருந்து வருகிறது.
தேர்தல் ஆணையம் பல இடங்களில் 100% வாக்கு செலுத்துவது கடமை என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றது. ஆனால் வாக்குக்கு காசு வாங்கினால் தண்டனை என்று அதில் இடம்பெறவில்லை. ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது கையும் களவுமாக பிடித்து யாராவது ஒருவருக்கு தண்டனை வழங்கினால் தான் காசு கொடுக்க மாட்டார்கள். இவர்கள் தொடர்ந்து தேர்தல் அரசியல் தான் செய்கிறார்கள். இதனால் காதில் தேன் ஊறுவது போல் செய்வார்கள். 50 ஆண்டுகள் மயக்கத்தில் உள்ள மக்கள் தற்போது விழித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். இடைத்தேர்தல் என்று கருதாமல் மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.