
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கணவரை இழந்த ஒரு பெண் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண் உறவினர் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அதனை திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் பார்த்தனர். அவர்கள் அந்த பெண் வாலிபருடன் இருப்பதை வீடியோவாக பதிவு செய்து 1000 ரூபாய் பணம் பறித்தனர்.
மேலும் அவர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதோடு நாங்கள் கூப்பிடும் போது தகாத உறவிற்கு வர வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அச்சத்தில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்(25), திலீபன்(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.