தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மஞ்சள்களை, விற்பனை செய்வதற்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தி கொண்டு செல்கின்றனர். இதனை அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்துக்கொள்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை வருவதால் அங்குள்ள மார்க்கெட் வருகிற 11-ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மார்க்கெடுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது, 11, 12 மற்றும் 18, 19 சனி, ஞாயிறு என்பதால் அந்த நாட்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது. அதன் பின்னர் வருகிற 20-ம் தேதி முதல் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.