பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு ரயில் நிலையம் அருகே உள்ள புட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் டார்ச் லைட் உதவியுடன் முட்புதருக்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து மூன்று மாதமே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வில்லிவாக்கம் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற பரிசோதித்த போது அந்த குழந்தை நலமுடன் இருப்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை புட்புதறில் வீசி சென்ற நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.