குஜராத்தில் தொழிலதிபரான ஸ்மித் ஜிவானி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 34 வயது ஆகிறது. இவருக்கு ஹிரால் (30) என்ற மனைவியும், ஷாஹித்(4) என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜிவானி குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி, மகன் மற்றும் பெற்றோரை கத்தியால் குத்தி விட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார்.

இந்த கொடூர செயலில் ஹிரால், ஷாஹித் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜிவானி மற்றும் அவரது பெற்றோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக ஜிவானி இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.