
மும்பையைச் சேர்ந்த சோஹைல் ஷேக் என்பவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவர் சத்திரபதி சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். முதல் மனைவியுடன் விவாகரத்து நடந்து கொண்டிருந்தபோது ஷேக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக ஷேக் தனது மனைவியிடம் 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். முதல் மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், விவாகரத்திற்காக அந்த பணத்தை கேட்பதாக கூறியிருந்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேக் அலுவலகத்தில் பார்ட்டி நடப்பதாக கூறி தனது மனைவியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்.
அங்கு பார்ட்டி முடிந்தது. அப்போது ஷேக் தனது மனைவியை அலுவலக உரிமையாளருடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் அங்கேயே ஷேக் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இருந்தும் இளம் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபத்தில் மூன்று முறை தனது மனைவிக்கு தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். மேலும் அவரை வீட்டை விட்டு விரட்டினார். இதுகுறித்து ஷேக்கின் இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்