தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என அனைத்து வகைகளிலும் தனக்கென பெயர் காட்டிய நடிகர் சத்யராஜ், பாகுபலி உள்ளிட்ட படங்களில் தன் திறமையால் மிகப்பெரிய ரசிகர்கள் மண்டலத்தை உருவாக்கியவர். இப்போது அவர் சந்தித்துள்ள தனிப்பட்ட சோகமான நிகழ்வை மகள் திவ்யா பகிர்ந்துள்ளார்.

சத்யராஜின் மனைவி கடந்த நான்கு வருடமாக கோமா நிலைமையில் இருப்பதாக அவரது மகள் திவ்யா உருக்கமாக தெரிவித்துள்ளார். “என் அம்மா வீட்டிலேயே இருப்பார், PEG டியூப் மூலம் உணவு கொடுக்க வேண்டிய நிலை. நாங்கள் அனைவரும் மனதளவில் பலவீனமடைந்துள்ளோம். ஆனால் அவர் ஒருநாள் நிச்சயம் குணமடைந்து திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எங்களுக்கு தெரியும் அம்மா நிச்சயம் திரும்ப கிடைப்பார்” என்று உருக்கமாகத் கூறியுள்ளார்.