இங்கிலாந்தில் வசிக்கும் மைக்கேல் பான்ட் என்ற எழுத்தாளர், கடந்த 1958ம் ஆண்டு “பட்டிங்டன்”  என்று சிறுகதை புத்தகத்தை எழுதினார். இந்த கதையில் பழுப்பு நிற கரடி கதாநாயகனாக கொண்டது. இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்தது. அதோடு இந்த சிறுகதையும் பிரபலமானது. இதையடுத்து அந்த பழுப்புக் கரடியின் பாத்திரத்தை மையமாகக் கொண்டு தொடர்கதைகள், கார்ட்டூன் தொடர் மற்றுமின்றி சினிமா படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து மகாராணியான மறைந்த எலிசபெத்துக்கு இது மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் ஆகும். இந்நிலையில் பட்டிங்டன் கதாபாத்திரத்தை போன்று புதிய சினிமா படம் உருவாக உள்ளது. அதற்காக போலியான பாஸ்போர்ட் ஒன்றை உருவாக்கித் தருமாறு குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசு பட்டிங்டன் பேரில் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரத்திற்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.