ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம் பெண் ஒருவர் தன் காதலனை வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். பின்னர் தன் காதலனை ஒரு இரும்பு பெட்டிக்குள் அடைத்து வைத்து விட்டார். அந்த இளம் பெண்ணின் செயலில் சந்தேகம் அடைந்ததால் உடனடியாக பெற்றோர் பெட்டியை திறந்து காட்டும்படி கூறியுள்ளனர். ஆனால் அந்த இளம் பெண் தன் பெற்றோரிடம் பெட்டியை திறக்காதவாறு சமாளிக்கிறார். இதனால் பெற்றோருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் கட்டாயப்படுத்தி பெட்டியை திறந்த நிலையில் அதில் ஒரு வாலிபர் கால் முட்டியை மடக்கி பெட்டிக்குள் படுத்திருப்பது தெரிய வந்தது. இதை பார்த்த உடன் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

பின்னர் அந்த வாலிபரை அவர்கள் தாக்குகிறார்கள். அந்தப் பெண் தன் காதலனை தாக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளும் நிலையில் அந்த சம்பவத்தை வீடியோ எடுப்பவர்களிடமும் வீடியோ எடுக்காதீங்க என்று கூறுகிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இளம்பெண்ணின் செயல் மிகவும் ஆபத்தானது என்று பலரும் கூறுகிறார்கள். ஏனெனில் இரும்பு பெட்டிக்குள் மூச்சு கூட விட முடியாது. அது சிறிய பெட்டிக்குள் உயிரோடு இருக்கும் ஒரு மனிதனை அடைத்து வைத்தது தவறு என்றும் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் கூறுகிறார்கள். மேலும் இது குறித்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.