
பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர் எனக்கூறப்படும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி, 30 மில்லியன் காட்சிகளைக் கடந்தது. 24 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவில், வெள்ளை தாடியுடன் கூன்விழுந்த முதியவர் தானாக நிற்க முடியாமல், கையில் தடியுடன் நின்று கொண்டு இருவர் அவருக்கு உதவிசெய்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த செய்தி தொடர்பான சில தவறான தகவல்கள் பரவியுள்ளன. குறிப்பாக, அந்த முதியவருக்கு 188 வயது என்றும், அவர் குகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், அவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சியாராம் பாபா என்றும், அவரது வயது 110 என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் இந்து மத துறவியர் எனவும் கூறப்படுகிறது.
அவர் கர்கோன் மாவட்டத்தில் வாழும் புகழ்பெற்ற துறவி என்று சமீபத்திய செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவரது வயது 109 என்று சில தனியார் செய்தி வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய தவறான தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.
🇮🇳 This Indian Man has just been found in a cave.
It’s alleged he’s 188 years old. Insane. pic.twitter.com/a7DgyFWeY6
— Concerned Citizen (@BGatesIsaPyscho) October 3, 2024
“>