நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.

அதன்பின்பு 10 நாட்கள் கழித்து விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள படரிக் கொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ளவர்கள் ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர்.

அப்போது நகமங்கலா என்ற முஸ்லிம் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள பகுதி அருகில் சென்ற போது முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினர்களும் ஒருவருக்கு ஒருவர் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறை பற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர் மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.