
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் வருகிற 10-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட பல்வேறு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.