திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி என்பவர் அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதத்தில் அவரது துப்பட்டா மற்றும் முடி அருகில் உள்ள மோட்டார் கன்வேயர் பெல்டிலில் சிக்கியது.

இதைத்தொடர்ந்து மோட்டர் சுற்றி கொண்டிருந்ததால் அவரது தலை உள்ளே இழுக்கப்பட்டு உடலில் இருந்து தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினாய் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.