கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை ஒரு வாலிபர் கடந்த வருடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதால் அவரது தாயார் இதுபற்றி காவல்துறையினிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண் தற்போது 18 வயதை எட்டி இருப்பதால் அவர் மேஜர் ஆகிவிட்டார். இதனால் நீதிபதி அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையின் நலம் கருதி அந்த வாலிபருக்கு அளிக்கப்பட்ட போக்சோ சட்டத்தை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து அந்த பாதிக்கப்பட்ட பெண் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது அந்த வாலிபர் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை அடுத்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.