
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் முடிந்து வெளியேறிய போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன்னுடைய ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து சாமியார் போலே பாபா அதிர்ச்சி கருத்தை கூறியுள்ளார். அதாவது பிறக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் இறக்கத்தான் போகிறோம். தவிர்க்க முடியாத விஷயத்தை யாரால் தடுக்க முடியும்? மரணம் என்பது விதி? என்று கூறியுள்ளார்