இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பொதுவாகவே குரங்குகளின் சேட்டை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும். மேலும் மனதின் கவலைகளும் பறந்து போய்விடும் வகையில் இருக்கும். இவ்வாறு எந்த நேரமும் சுட்டித்தனம் செய்து வரும் குரங்கு ஒன்று திடீரென்று உயிரற்ற நிலையில் இருக்கிறது. இதனைப் பார்த்த டாக்ஸி டிரைவர் ஒருவர் அதற்கு சிபிஆர் என்ற முதலுதவி அளித்து உயிர் பெற வைக்கும் காட்சி தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.