
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் திட்டமானது கடந்த 2023 ஆம் வருடம் தமிழக அரசு தொடங்கப்பட்டது. இதை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.
இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு வரும் 15ஆம் தேதி முதல், மாதந்தோறும் 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்