கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் தான். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின் முன்னாள் காதலரின் நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவியின் காதல் பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

படிப்பில் கவனம் செலுத்தும் படி அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் மாணவி அதனை கவனத்தில் கொள்ளாமல் கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்று உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். இன்ஸ்டாகிராம் பிரபல நபரை காதலித்து காதல் முறிந்த சோகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.