கன்னியாகுமரிக்கு மூன்று நாள் பயணமாக மோடி வந்துள்ள நிலையில் நேற்று மாலை பகவதி அம்மனை தரிசித்த நிலையில், விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் விவேகானந்தா… இவர் வெறுப்பானந்தா… என்று பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

திருமாவளவன் நரேந்திரா நரேந்திர மோடி குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேரேந்திரா… நரேந்திர மோடி… அவர் விவேகானந்தா.. இவர் வெறுப்பானந்தா… இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெரும் முதலீடு .அதனால் வெறுப்பானந்தாவாக வலம் வருகிறார். எத்தர்களின் வித்தைகள் ஒருபோது எடுபடாது என்று குறிப்பிட்டுள்ளார்.