சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக கூறி யாராவது வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் அவற்றை கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
மேலும் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை, பணம் வரும் என்று யாரும் கூறினால் அதனை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கபட்டால் பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அறிவுறுத்தியுள்ளார்.
