
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலைக்குள் முழு உயரத்தை எட்ட வாய்ப்பு உள்ளதால் வராக நதி கரையோர கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாமென நீர்வளத்துறை வலியுறுத்தியுள்ளது.