நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் காலியாக உள்ள ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையானது ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் 4,660 எஸ்சிஐ மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. கான்ஸ்டபிள் பணிகளுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்ஐ பணிகளுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏப்ரல் 15 முதல் மே 14 வரை விண்ணப்பிக்கலாம்.