
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்த நாட்டு நாணயங்களை நாம் பயன்படுத்த வேண்டி இருக்கும். ஆனால் இந்தியர்கள் இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இந்திய ரூபாயை தங்களுடைய நாட்டில் பயன்படுத்த தற்போது வரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, பிஜி, மலேசியா, மொரிஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 35 நாடுகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும். அதாவது அமெரிக்க டாலரின் மதிப்புக்கு நிகராக இந்தியாவின் ரூபாயும் திடமாக ஒரு மதிப்பை பெற்றுள்ளதால் சர்வதேச நாடுகளில் இந்திய நாணயம் வரவேற்பு பெற்றுள்ளது.