மத்திய பிரதேஷ் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் லோகானி. 35 வயதான இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணிற்கு இது நான்காவது திருமணம். சில தினங்களுக்கு முன்பு சுனில் லோகானி தனது மனைவி ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் காணொளி ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு தீக்குளித்து தற்கொலைக்கும் முயற்சித்தார். அவர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சுனில் லோகானி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ஏற்கனவே இவரது மனைவி சுனில் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார் எனவே போலீசார் சுனில் லோகானியின் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.