அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கிறது. இதற்காக பலருக்கும் விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழ் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் நர்ஹர்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷி துர்கா என்பவருக்கு கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 700 க்கும் அதிகமான பிரேத பரிசோதனைகளுக்கு உதவியாளராக பணி புரிந்துள்ளார்.

இது குறித்து சந்தோஷி துர்கா கூறுகையில் தன் வாழ்க்கையில் இது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியதோடு இது ஸ்ரீராமர் தனக்கு அனுப்பி வைத்த அழைப்பிதழ் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.