தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் கோடேஸ்வர் ரெட்டி. இந்திய ராணுவ வீரரான இவர் நேற்று தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பட்டம் விட பயன்படுத்த தடை செய்யப்பட்டிருக்கும் மாஞ்சா நூல் இவரது கழுத்தில் சுற்றியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோடேஸ்வர் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.