இந்தியாவில் பல மாநிலங்களிலும் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளிருக்காக நெருப்பு மூட்டிய ஆறு பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த ராகேஷ் -லலிதா தம்பதியினர் குளிருக்காக நெருப்பு மூட்டிய போது புகை அதிகமாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே மற்றொரு இடத்திலும் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.