பெங்களூரில் உள்ள தேசிய கூட்டுறவு வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேசிய கூட்டுறவு வங்கிக்கு 13 கிளைகள் உள்ளன. பெங்களூரை சேர்ந்த தேசிய கூட்டுறவு வங்கியின் பலவீனமான நிதிநிலை காரணமாக ரிசர்வ் வங்கி அதன் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வங்கியில் வணிக கட்டுப்பாடுகளை விதித்து ஒரு கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்யவும் திரும்ப பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இனி இந்த வங்கி எந்த புதிய கடனையும் வழங்கக் கூடாது. மத்திய வங்கியின் அனுமதி இல்லாமல் புதிய வாய்ப்புகளை ஏற்கக் கூடாது. வணிகம் முடிவடைந்ததிலிருந்து ஆறு மாத காலத்திற்கு தேசிய கூட்டுறவு வங்கியின் மீது ரிசர்வ் வங்கியில் வணிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி வங்கியின் டெபாசிட் செய்பவர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் 5 லட்சம் ரூபாயை டெபாசிட் காப்பீட்டின் கீழ் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
