கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி, மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி.  மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்.  வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ₹1500 நிதியுதவி, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் நாங்கள் அளித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற 750,000 கோடி தேவை என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மோடி அரசால் கர்நாடகம் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக சாடிய அவர், ஜிஎஸ்டி வரி மூலம் கிடைக்கும் அதிக வரி மத்திய அரசுக்கே செல்கிறது என்றும் கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற பாஜக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் சாடினார்.