![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/05/d91d6301-38f0-4d58-99df-7e9b3f817b7b.jpg)
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக வாரந்தோறும் திங்கட்கிழமை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.