தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது “போக்குவரத்துத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது காவல்துறை விசாரணை நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

நேர்மையாக நடப்பதை அரசு தான் உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செஞ்சி மஸ்தான் இருவரும் கள்ளச்சாராய விற்பனை குறித்து அறிந்திருந்தும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே செயல்பட்டு இருக்கின்றனர் என்று கூறினார்.