தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய அகவிலைப்படியை 38 சதவிகிதத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரக்கூடிய நிலையில் அரசின் இச்செய்தி அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கிறது.

இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38% ஆகவுள்ள அகவிலைப்படியானது 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்