இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே போகும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.