
சுயேச்சை வேட்பாளர் வெற்றிக்கு முந்தைய நாள் மாரடைப்பால் காலமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உபி மாநகராட்சி தேர்தலில் கதிப்பூர் பத்தாவது வார்டில் சாந்தாராம் என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் அவர் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சோகம் என்னவென்றால் நேற்றைய முன் தினமே அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். அவர் வென்றதை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.