கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர் லாரி மீது மோதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேருந்துகளில் வந்த பயணிகளை மாற்று பேருந்துகள் மூலமாக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more