சென்னையில் சாலைகளுக்கு புதிதாக தார் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.இதனிடையே மின்சாரத்துறை சார்பாக மின்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட மின் சார்ந்த பணிகளுக்காக அடிக்கடி தேவைப்படும் இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதனைப் போலவே குடிநீர் இணைப்புகளை சரி செய்தால் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காகவும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்படுகிறது. அவ்வாறு பொது இடங்களில் தொடர்ந்து பள்ளம் தோண்டப்படுவதாக மாநகராட்சிக்கு புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக போடப்படும் தார் சாலைகளில் அடுத்த ஒரு ஆண்டுக்கு அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் பள்ளம் தோண்ட கூடாது என்று கூறி தடை விதித்துள்ளது. மேலும் இந்த விதிமுறை மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியத்திற்கும் பிற நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.