
டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6E 308 எனும் விமானம் காலை 7:56 மணியளவில் பெங்களூரு புறப்பட்டது. அப்போது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் குடி போதையில் அவசரகால வழியின் கதவை திறக்க முயன்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த பயணியை விமான பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மும்பை வந்தடைந்த பிறகு அவரை CISF பாதுகாப்பு படையினரிடம் விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். தற்போது இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.