திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தீஷ் குமார்(14) என்ற மகன் இருந்துள்ளார். இளச்சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு நித்தீஷ் குமார் தனது நண்பர்களுடன் பிச்சாண்டார் கோவில் ரயில் நிலைய தண்டவாளம் அருகே விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தீஷ் குமாரின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.