ஆந்திராவில் ஆளுநருடன் மோதல் இல்லையென மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜக இல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்-முதலமைச்சரின் இடையே மோதல் போக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய மாநிலத்தில் அத்தகைய மோதல் இல்லையென தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடனும் ஆந்திராவிடைய நல்லுறவு நீடிக்கிறது. அதற்காக ஆந்திராவிற்கான  சிறப்பு அந்தஸ்து உட்பட இதர வாக்குறுதிகளில் இருந்தும் மாநில அரசு பின் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் தங்களுக்கு வாக்குறுதி தரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனக்கு நல்ல நண்பர் தான் எனக் கூறிய ஜெகன்மோகன் அவர் பிஆர் எஸ் என்ற புதிய கட்சி ஆரம்பித்தது பற்றியோ கூட்டணியில் இணைந்து கொள்வது பற்றியோ என்னிடம் எதுவும் சொல்லவில்லை, கேட்டுக்கொள்ளவும் இல்லை என கூறியுள்ளார்.